‘CPI விசாரணை வேண்டும்’- சர்ச்சையை கிளப்பிய அதிமுக பேனர்

 
admk protest

கள்ளக்குறிச்சி விவகாரத்தை கடித்து CBI விசாரணை வேண்டும் என்பதற்கு பதில், CPI விசாரணை வேண்டும் என பதாகை ஏந்தி போராடிய அதிமுகவினரால் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களை தடுக்கத் தவறிய திமுக அரசை கண்டித்து, கள்ளக்குறிச்சியில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துக்கொண்டுள்ளார். அதிமுக சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் புதுச்சேரி அதிமுக சார்பில் கள்ளக்குறிச்சி சம்பவத்தை கண்டித்து  கண்டன ஆர்ப்பாட்டம் இன்று  நடைபெற்றது. மாநில செயலர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பதாகையில் சிபிஐ (மத்திய அரசின் விசாரணைக் குழு) வித்தியாசம் தெரியாமல் கட்சி பெயரை எழுதியிருந்தனர். CBI என இருப்பதற்கு பதிலாக CPI என ஒரு இடதுசாரி கட்சி பெயரை குறிப்பிட்டிருந்ததை பலரும் பார்த்தனர். ஒரு விசாரணை அமைப்புக்கும் கட்சிக்கும் வித்தியாசம்  தெரியாமல் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்களே என மக்கள் கேள்வி எழுப்பினர். இது நகைப்பை ஏற்படுத்தியது.