இந்த மாதம் 31ஆம் தேதி வரை பொங்கல் தொகுப்பு ? அரசுக்கு ஓபிஎஸ் வைக்கும் முக்கிய கோரிக்கை!!

 
ops

பொங்கல் பண்டிகைக்கு முன்பே குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பில் அனைத்து பொருட்களும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். ஏற்கனவே வழங்கப்பட்ட தொகுப்பில் குறைபாடு இருந்தால் அதை சரி செய்ய ஆவன செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளார்.

 இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் உள்ள நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பில் உள்ள பொருட்கள் தரமற்று இருப்பதாகவும்,  எல்லோருக்கும் 21 பொருட்கள் கிடைக்கவில்லை என்றும் பெரும்பாலான பள்ளிகளில் 5 முதல் 6 பொருட்கள் குறைவாக இருப்பதாகவும், இருக்கின்ற பொருட்களின் பொட்டலங்கள் திறந்து இருப்பதாகவும், சில பகுதிகளில்  துணிப்பை கொடுப்பதில்லை என்றும், ஆங்காங்கே பொதுமக்கள் குறை கூறும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது.  இது மட்டுமல்லாமல் சில பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் வழங்கிய வெல்லம் பாகு போல் உருகி உள்ளதாக தகவல் வருகிறது. இது குறித்து நியாயவிலை கடைகளில் பணிபுரிவோரிடம் கேட்டால் எங்களுக்கு என்ன வருகிறதோ? அதை தான் நாங்கள் வழங்க முடியும் என்று வேதனையோடு அவர்கள் தெரிவிப்பதாக கூறப்படுகிறது. திமுக அரசின் மெத்தன போக்கு நியாய விலை கடைகளில் பணிபுரிவோர் என்ன செய்வார்கள்?

pongal

இந்த சூழலில் தமிழக உணவுத்துறை அமைச்சர் எல்லா நியாய விலை கடைகளிலும் பொருட்களின் பட்டியலை வைக்கவும், அனைத்து பொருட்களும் உள்ளனவா என்று சரி பார்க்க குடும்ப அட்டைதாரர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும், இந்த மாதம் 31ஆம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்து இருப்பதாக தெரிவித்து செய்தி வந்துள்ளது, குடும்ப அட்டைதாரர்கள் சரிபார்த்து புகார் கொடுப்பதால் தான், இந்த பிரச்சனை எழுகிறது.  இதன் காரணமாக பல நியாய விலை கடைகளில் வாக்குவாதம் ஏற்படுகிறதே ஒழிய பொருட்கள் மக்களை சென்றடையவில்லை.  இது தவிர இப்போது வாங்காமல் விட்டு விட்டால் பின்னர் கிடைக்காது என்று சந்தேகமும் மக்கள் மனங்களில் எழுந்து உள்ளது.  எனவே அனைத்து பொருட்களும் இருக்கிறதா என்பதை உறுதி செய்து நியாயவிலை கடைகளுக்கு வழங்க வேண்டிய கடமை அரசுக்கு தான் இருக்கிறது செய்ய வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ops

இந்த பொங்கல் பரிசு தொகுப்பு இந்த மாதம் 14ஆம் தேதி பொங்கல் பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்பதற்காகத்தான். இந்த நிலையில் தவிர்க்க இயலாத காரணங்களால் தொகுப்பை பெற இயலாதவர்கள் இந்த மாதம் 31ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என்பது, எந்த நோக்கத்திற்காக இந்த பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டதோ அந்த நோக்கத்தைச் சிதைக்கும் வகையில் அமைந்துள்ளது. . ரொக்கமாக இருந்தால் கடன் வாங்கி பொங்கல் பண்டிகையை கொண்டாடிவிட்டு பின்னர் அதை திருப்பி செலுத்தி விடலாம். ஆனால் தற்போது திமுக ஆட்சியில் வழங்கப்படுவதும் தொகுப்பு அதை வைத்து என்ன செய்ய முடியும்? எனவே தமிழக முதல்வர் இதில் தனிக்கவனம் செலுத்தி பொங்கல் பண்டிகைக்கு முன்பு அனைத்து பொருட் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு,  அனைத்து பொருட்களும் நல்ல முறையில் கிடைக்கவும், ஏற்கனவே வாங்கிய தொகுப்பில் குறைபாடு இருந்தால் அதை சரி செய்யவும் ஆவன செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் " என்று குறிப்பிட்டுள்ளார்.