தவெகவிற்கு போனதில் இருந்து செங்கோட்டையன் பேசவே இல்லை- ஓபிஎஸ்

 
ops ops

செங்கோட்டையன் தவெகவிற்கு சென்றதிலிருந்து என்னிடம் பேசவில்லை என முன்னாள் முதல் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Ops

பெரியகுளத்தில் இருந்து சென்னை செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது, “திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. தமிழக வெற்றி கழகம் சென்றதிலிருந்து செங்கோட்டையன் என்னிடம் பேசவில்லை. என்டிஏ கூட்டணியில் சேர உள்ளதாக டிடிவி தினகரன் என்னிடம் கூறவில்லை.

100 நாள் வேலை திட்டம் தொடர்பாக விரிவான அறிக்கை வர உள்ளது. அது நூறு சதவீதம் மத்திய அரசு கொடுத்து கொண்டிருந்தது. தற்போது 40 சதவீதம் குறைத்து தமிழக அரசு என்று சொல்கிறார்கள். 23ம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. அதுவரை பொறுத்து இருக்கவும்” என கூறினார்.