“ஈபிஎஸ்க்கு நல்ல மனசு” - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

 
op

அதிமுக ஒன்றிணைய வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் தொடர்ந்து பேசப்படும் நிலையில் ஓநாயும், வெள்ளாடும் ஒன்று சேர முடியுமா? என்று கூறி அறிக்கை வெளியிட்ட ஈபிஎஸ்-க்கு எடப்பாடி பழனிசாமிக்கு நல்ல மனசு என ஓபிஎஸ் பதில் அளித்துள்ளார்.

ops


காரைக்குடி அடுத்த தேவக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், “ஓநாயும், வெள்ளாடும் ஒன்றுபட்டு இருக்க முடியுமா? என ஈபிஎஸ் கேள்வி எழுப்புகிறார். எடப்பாடி பழனிசாமியின் வார்த்தை ஜாலம் நடைமுறைக்கு ஒத்து வராது. அதிமுக இணைந்தால் தான் வெற்றி பெற முடியும் என்பது மக்களாலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அறிக்கைவிட்ட எடப்பாடி பழனிசாமிக்கு நல்ல மனசுதான். அதிமுக தொண்டர்கள் விஜய் கட்சிக்கு செல்வார்கள் என மருது அழகுராஜ் கூறுகிறார். உண்மையில் தூய அதிமுக தொண்டர்கள் யாரும் எந்த கட்சிக்கும் செல்ல மாட்டார்கள் என்பது தான் அதிமுக தொண்டர்களின் வரலாறு. 

விஜய் இதுவரை எந்த தேர்தலிலும் போட்டியிடவில்லை. தேர்தலில் நின்று மக்கள் செல்வாக்கை பெற்றால் தான் அவர் குறித்து கருத்து சொல்ல முடியும். திராவிட இயக்க வரலாறு இரு மொழி கொள்கைதான் என்பதை சட்டமன்ற தீர்மானம் மூலம் பல முறை தெளிவுபடுத்தி இருக்கிறோம். அதிமுக இணைந்தால் தான் வெற்றி பெற முடியும் என்பது அதிமுக அடிமட்ட தொண்டர்கள் வரை உள்ள கருத்து. தேர்தலுக்கு ஓர் ஆண்டு உள்ளதால் அதிமுக- பாஜக கூட்டணி குறித்து இப்போது முடிவு செய்ய முடியாது” என்றார்.