“பழனிசாமியை மீண்டும் முதலமைச்சர் ஆக்க சூளுரைப்போம்”- அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்
எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதலமைச்சர் ஆக்க சூளுரைப்போம் என அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் :-
· அதிமுக – பாஜக இடையே கூட்டணி அமைத்ததற்கு பொதுக்குழு ஒப்புதல்
· சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணிக்கு அதிமுக தலைமை தாங்குகிறது ; கூட்டணிகள் குறித்து முடிவெடுக்க எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம்
· கோவையிலும், மதுரையிலும் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும்
· மழை வெள்ளத்தில் இருந்து மக்களை பாதுகாப்பதில் திமுக அரசு தோல்வியடைந்துள்ளது
· தீவிர வாக்காளர் திருத்த பணியான SIR யை அதிமுக வரவேற்கிறது
· நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 22%மாக உயர்த்த திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
· வேருக்கு வெந்நீரையும் விவசாயிகளுக்கு கண்ணீரையும் தொடர்ந்து தந்து வரும் மு.க.ஸ்டாலினுக்கு அனுமதி மறுப்பு
· முதலீட்டில் ஆமை வேகம், குறையும் முதலீடுகள் ! தமிழக மக்களை ஏமாற்றி, போலி புள்ளி விவரங்களை அள்ளி வீசும் முதலமைச்சருக்கு கண்டனம்
· தமிழ்நாட்டில் கடந்த நான்கரை ஆண்டுகளாக சிறுமிகள், இளம் பெண்கள், வயதான பெண்கள் என அனைத்து தரப்பு பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது – காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சருக்கு கண்டனம்
· வருவாய் செலவினத்திற்கு ஊதாரித்தனமாக செலவழித்துவிட்டு, தமிழக மக்களை தொடர்ந்து கடனாளியாக்குகிறது திமுக அரசு
· தொடர் கொள்ளைகள், கொலைகள்,வழிபறி என சட்டம் ஒழுங்கு சரிந்து கிடக்கிறது காவல்துறை அமைச்சர் முதலமைச்சருக்கு கண்டனம்
· நீட் உள்ளிட்ட திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றாதற்கு கண்டனம்
· மதுரை மேயர் ராஜினாமா செய்யும் அளவிற்கு ஊழல் நடைபெற்றிருப்பதற்கு கண்டம்
· பட்டியலினத்தவர்களை ஒதுக்கி வைப்பது திமுக ஆட்சியில் நடந்துகொண்டிருப்பதற்கு கண்டனம்
· நீதித்துறை மீதான ஆட்சியாளர்களின் மிரட்டல்களை கைவிடவேண்டும். நீதித்துறையில் அரசின் தலையீடு இருக்கக் கூடாது. நீதித்துறைக்கே சவால்விடும் ஆட்சியாளர்களின் ஆதிக்க மனநிலையை பொதுக்குழு கண்டிக்கிறது
· எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதலமைச்சர் ஆக்க சூளுரைப்போம் – அதிமுக பொதுக்குழு


