“வெளியில் சென்றால் திரும்பி வீட்டுக்கு வருவோம் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது”- ஜெயக்குமார்

 
ஜெயக்குமார் ஜெயக்குமார்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே அதிமுக நிர்வாகி இல்ல விழாவில் பங்கேற்ற பின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். 

ஜெயக்குமார்

அப்போது பேசிய ஜெயக்குமார், “திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்பொதெல்லாம் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கும்ம், தமிழ்நாடு முழுமையாக பாதிக்கப்படுகிறது. ஆளுங்கட்சியின் தலையீட்டாலேயே சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுகிறது. அதிமுக ஆட்சிக்காலத்தில் யார் தவறு செய்தாலும் தண்டனை வழங்கப்பட்டது, அதிமுக ஆட்சியில் மக்கள் நிம்மதியாக இருந்தனர். திமுக ஆட்சியில் 10 மாதங்களில் 918 கொலைகள் நடந்துள்ளன. தமிழ்நாடு கொலை மாநிலமாக மாறியுள்ளது

திராவிட மாடல் எனக் கூறிக்கொள்ளும் ஸ்டாலின், இதை பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. வெளியில் சென்றால் திரும்பி வருவோம் என்பது இந்த ஆட்சியில் உத்தரவாதம் கிடையாது. சோற்றில் பூசணிக்காயை மறைக்கும் வித்தை திமுகவுக்கு தெரியும், சோஷியல் மீடியா மூலம் நல்லாட்சி நடத்துவது போல் செயல்படுகின்றனர். மாநிலத்தின் உரிமையை தாரை வார்த்துவிட்டு, துதிபாடிகளின் பட்டத்தை கொடுத்து விட்டால் மாநிலத்தின் சுயாட்சி பாதுகாவலர் ஆகிவிட முடியுமா? அந்தப் பட்டத்தைப் பெற ஸ்டாலினுக்கு எந்த ஒரு தகுதியும் இல்லை. திமுக தாரை வார்த்துக் கொடுத்த உரிமைகளை அதிமுக மீட்டெடுத்தது. குறிப்பாக முல்லை பெரியார் பிரச்சனை, காவிரி விவகாரம், கச்ச தீவு தாரை வார்த்து கொடுத்தது என அனைத்தும் திமுக ஆட்சியில் தான். கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொது பட்டியலுக்கு இந்திரா காந்தி  மாற்றிய போது 17 ஆண்டுகாலம் மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்த போது கேட்காததால் நீட் போன்ற கொடூர அரக்கனால் தமிழ்நாடு கஷ்டப்படுகிறது. மாநில சுயாட்சி நாயகன் என்ற பட்டம் அவர்களுக்குள்ளே ஏற்படுத்திக் கொள்வது” என்றார்.