அதிமுகவில் இருந்துகொண்டு சுயேட்சையாக போட்டி- ஈபிஎஸ் அதிரடி நடவடிக்கை

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் அதிமுக நிர்வாகி செந்தில் முருகனை கட்சியில் இருந்து நீக்கினார் எடப்பாடி பழனிசாமி.
இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “ஈரோடு மாநகர் மாவட்டம் கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் கழகக் கட்டுப்பாட்டை மீறி, தலைமை எடுத்த முடிவிற்கு மாறாக, ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டு, கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திரு. B. செந்தில் முருகன், (ஈரோடு மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.