“விஜய் பேசுவதை கண்டுகொள்ளாதீர், அண்ணாமலை பற்றி எதுவும் வேண்டாம்”- ஈபிஎஸ்
சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அமைப்பு ரீதியாக உள்ள 82 மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய அடிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “புதிதாக கட்சி தொடங்கியவர்கள், கட்சி வளர்ச்சிக்காக எதையாவது பேசுவார்கள் என்பதால் தவெக தலைவர் விஜய் பேசுவதை கண்டுகொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அண்ணாமலை நம்மைப் பற்றி எதுவும் பேசுவதில்லை. ஆகவே நீங்களும் அவரைப் பற்றி எதுவும் பேச வேண்டாம். கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்படாதா? என பல பேர் வெளியில் காத்திருக்கிறார்கள். கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்படுத்தும் தேவையற்ற விவாதங்களை, பேச்சுக்களை தவிருங்கள். கலம் அதிமுகவுக்கு சாதகமாக உள்ளதை தேர்தல் பிரச்சாரத்தில் நேரில் கண்டேன்” என்றார்.


