“காமராஜர் படத்தோடு நாடார் என்று போட்டு மலிவான ஜாதி அரசியல் வேறு” : கே.எஸ். அழகிரியை சாடிய நடிகை கஸ்தூரி
தமிழகத்தையே உலுக்கியுள்ள சாத்தான்குளம் விசாரணை கைதிகளான தந்தை – மகன் இருவரும் போலீசாரால் அடித்து கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷன் அழைத்து செல்லப்பட்ட அவர்கள் ஆசனவாயில் ரத்தம் சொட்டிய படி உடலில் பல காயங்களுடன் இறந்தனர். இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பாதிக்கப்பட்ட ஜெயராஜ் – பென்னிக்ஸ் குடும்பத்தினரை திமுக எம்பி கனிமொழி, உதயநிதி ஸ்டாலின உள்ளிட்ட பலரும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வந்தனர்.
இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு ஆறுதல் கூற நேரில் வருவதாக அப்பகுதி முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இந்த போஸ்டர் இணையத்தில் வெளியாகி பேசும் பொருளாக மாறியுள்ளது.
போஸ்டர் அடிக்கற செலவை துயர் துடைக்க தந்திருக்கலாம். காமராஜர் படத்தோடு நாடார் என்று போட்டு மலிவான ஜாதி அரசியல் வேறு.
அது சரி, இந்த போஸ்டரில் காணும் பெரிய மனிதர்கள் பணக்காரர்கள் கொரோனா பணிக்கு எவ்வளவு கொடுத்தார்கள்?
— Kasturi Shankar (@KasthuriShankar) June 29, 2020
இதுகுறித்து நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில், “போஸ்டர் அடிக்கற செலவை துயர் துடைக்க தந்திருக்கலாம். காமராஜர் படத்தோடு நாடார் என்று போட்டு மலிவான ஜாதி அரசியல் வேறு. அது சரி, இந்த போஸ்டரில் காணும் பெரிய மனிதர்கள் பணக்காரர்கள் கொரோனா பணிக்கு எவ்வளவு கொடுத்தார்கள்? என்று பதிவிட்டதுடன், இதுக்கெல்லாமா விளம்பரம்? கஷ்டகாலம்.. என்று பதிவிட்ட நெட்டிசனின் ட்வீட்டையும் குறிப்பிட்டுள்ளார்.
!!!!! https://t.co/UoFXhj4Enw
— Kasturi Shankar (@KasthuriShankar) June 29, 2020