பன்முக திறன் கொண்ட ராமதாஸ் மறைவு வேதனை அளிக்கிறது - விஜயகாந்த் இரங்கல்

 
vijayakanth

இயக்குநரும், நடிகருமான ராமதாஸ் மறைவுக்கு விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

tn

இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "தமிழ் சினிமாவின் இயக்குநர், நடிகர், எழுத்தாளர் என பன்முக திறன் கொண்ட ஈ.ராமதாஸ் அவர்கள் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியை கேட்டு மிகுந்த அதிர்ச்சியும்  மன வேதனையும் அடைந்தேன். 

tn

திரைத்துறை மீதான ஆர்வத்தால் சென்னைக்கு வந்து எழுத்தாளராக திரை வாழ்வை தொடங்கியவர் இயக்குநராகி பின்னர் ஏராளமான படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார்.
 எனது நண்பர் மறைந்த ஈ.ராமதாஸ் அவர்கள் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். அனைவரிடமும் அன்பாக பழக கூடியவர். திரைத்துறையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு சிறப்பாக பணியாற்றியவர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.