முன்னாள் முதலமைச்சருடன் நடிகர் ரஜினி சந்திப்பு.. என்ன காரணமா இருக்கும்..??

 
rajini

மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை , நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார்.  

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய திரையுலகிலும் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக இருந்து வருகிறார். இவர் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள்  நடித்து வருகின்றனர். இந்தப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால் சலாம்’ படத்திலும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார்.

முன்னாள் முதலமைச்சருடன் நடிகர் ரஜினி சந்திப்பு.. என்ன காரணமா இருக்கும்..??

ஒருபக்கம் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் ரஜினி  நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டியை பார்த்து  ரசித்தார்.  மும்பை கிரிக்கெட் சங்க தலைவருடன் இணைந்து பார்த்த ரஜினி பின்னர் மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர்  உத்தவ் தாக்கரேவை சந்தித்தார். மகராஷ்டிரா முன்னாள் முதலமைச்சரும், சிவசேனா கட்சியின் முன்னாள் தலைவருமான உத்தவ் தாக்கரேவை,  மும்பை  மாட்டோஸ்ரீ இல்லத்தில் நேரில் சென்று சந்தித்தார்.  இது  தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த திடீர் சந்திப்பிற்கான காரணம் என்ன என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது.