நடிகர் அருண் விஜய்க்கு கொரோனா.. வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாக ட்வீட்..

 
அருண் விஜய்


 நடிகர் அருண் விஜய்க்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அவர் வீட்டில் தனிமைபடுத்திக்கொண்டுள்ளார்.


இந்தியாவில் சமீப காலமாக குறைந்திருந்த  கொரோனா பாதிப்பு, தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  மற்றொருபுறம் ஒமைக்ரானும் தன் பங்கிற்கு அச்சுறுத்தி வருகிறது ..  இந்த கொடிய வைரஸின் பிடியில் சிக்கி பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் தவித்து வருகின்றனர்.  அண்மையில் நடிகர் கமல்ஹாசன் கொரோவால் பாதிக்கப்பட்டு மீண்டார்.

அருண் விஜய்

அதேபோல் நடிகர் அர்ஜுன்,  கடந்த சில தினங்களுக்கு முன்னர் நகைச்சுவை நடிகை வடிவேலு ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பின் குணமடைந்தனர். இவர்கள் வரிசையில் தற்போது நடிகர் அருண் விஜய்யும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதுகுறித்து அவரே தவது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

அருண் விஜய்

அவருடைய ட்விட்டர் பதிவில், “ அனைவருக்கும் வணக்கம்.. நான் கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன்..  அதில் எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.. மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டில் தனிமை படுத்திக்கொண்டேன்.. அனைத்து பாதுகாப்பி வழிமுறைகளையும் பின்பற்றி வருகின்றேன்.. அனைவரது அன்புக்கும் நன்றி...  அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்..!” என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் அருண் விஜய் நடிப்பில் ‘யானை’, ’பார்டர்’உள்ளிட்டப் படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளன. அண்மையில் யானை படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது..

Hi everyone!!
This is to inform you'll that I have been tested positive for COVID-19. I am currently under home quarantine and following all the safety protocols as per my doctor's advice.
Thanks for all the love..
Stay safe & take care everyone 🙏🏽

— ArunVijay (@arunvijayno1) January 5, 2022