சென்னை திரும்பிய நடிகர் அஜித்குமார்!

 
1

தமிழக சட்டசபை தேர்தல் நாளை நடைபெற உள்ளது. வாக்களிப்பதற்காக பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுக் கொண்டிருக்கும் நிலையில், பணி நிமித்தமாக வெளியூரில் இருப்பவர்களும் சென்னை திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில், கார் பந்தயத்தில் கலந்து கொள்வதற்காக பெல்ஜியத்தில் முகாமிட்டிருந்த நடிகர் அஜித்குமார் சென்னை திரும்பினார். உலகின் சவாலான கார் பந்தயங்களில் ஒன்றான 24H Series-இல் அஜித்குமார் ரேஸிங் அணி கலந்து கொண்டு இராண்டாம் பிடிம் பிடித்தது. இதற்காக அஜித்துக்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தனது அணியுடன் அஜித்குமார் பெல்ஜியத்தில் இருந்தாலும், தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்காக அவர் சென்னை திரும்பி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.