எக்ஸ்பிரஸ் ரயிலில் தவறாக நடந்து கொண்ட இளைஞர்... நூதன தண்டனை கொடுத்த இளம்பெண்..!!

 
Q

பத்னேரா-அகோலா இடையே சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில், இளைஞர் ஒருவர் பெண் பயணிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. அந்த இளைஞரை அங்கிருந்த சக பயணிகள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

இந்நிலையில், பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞருக்கு பாடம் கற்பிக்க முடிவு செய்த இளம்பெண், தன்னிடம் இருந்த மேக்கப் பொருட்களை எடுத்து அந்த இளைஞரின் முகத்தில் போட்டுவிட்டார். அவரது முகத்தில் லிப்ஸ்டிக் போட்டதோடு, கைகளில் வளையலை மாட்டிவிட்டார். இளைஞருக்கு இளம்பெண் கொடுத்த நூதன தண்டனை தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவின.