கிணற்றில் குளிக்க சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பலி

 
கிணற்றில் விழுந்து தற்கொலை

மணப்பாறை அருகே கிணற்றில் நீரில் மூழ்கி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிணற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவருக்கு நேர்ந்த சோகம்..

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கஸ்பாபொய்கைப்பட்டியைச் சேர்ந்தவர் விஷால் (வயது 19). இவரும், கலையரசன் என்பவரும் கல்பாளையத்தான்பட்டியில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் நேற்று மாலை குளிக்கச் சென்றனர். இந்நிலையில் எதிர்பாராத விதமான விஷால் நீரில் மூழ்கினார். இதைப்பார்த்த கலையரசன் சப்தம் போடவே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வந்து மீட்க முயற்சி செய்தும் முடியவில்லை. பின்னர் இதுதொடர்பாக மணப்பாறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் நீண்ட நேரம் தேடுதல் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் ஆத்திரம் அடைந்த வாலிபரின் உறவினர்கள் மணப்பாறை – துவரங்குறிச்சி சாலையில் கல்பாளையத்தான்பட்டி அருகே உள்ள தனியார் பெட்ரோல் பங்க் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின் மறியலை கைவிட்டனர். இதையடுத்து சிறிது நேரத்தில் விஷால் சடலமாக மீட்கப்பட்டு உடலை பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.