இதெல்லாம் என் பிரண்ட்ஸ்.... ரேப் பண்ணுங்க! கணவனை ஏவி விட்டு வீடியோ எடுத்து மிரட்டிய பெண்!

திருப்பதியில் தோழியாக பழகுபவர்களுக்கு கஞ்சா பழக்கப்படுத்தி போதையில் இருக்கும்போது கணவர் மூலம் பாலியல் பலாத்காரம் செய்ய வைத்து வீடியோ எடுத்து மிரட்டி வந்த கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர்.
திருப்பதி நகரில் உள்ள பிரபல பல்கலைகழகத்தில் பி.எல். இறுதியாண்டு படிக்கும் பிரணவ் கிருஷ்ணா, தன்னுடன் படித்து வந்த கர்னூலைச் சேர்ந்த தனது தோழியை அவ்வப்போது வீட்டிற்கு அழைத்து செல்வது வழக்கம். அவ்வாறு அழைத்து செல்லும் பிரணவ் கிருஷ்ணா, அந்த பெண் சாப்பிடும் பிரியாணியில் கஞ்சா போடும் பழக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தார். அவ்வாறு கஞ்சா போதையில் தோழி இருக்கும் போது அவரது கணவர் கிஷோர் ரெட்டி மூலம் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய வைத்து அதனை வீடியோ எடுத்துள்ளார்.
பின்னர் அந்த வீடியோ, போட்டோக்களை அந்த இளம்பெண்ணின் சகோதரர் மற்றும் குடும்பத்தினருக்கு அனுப்பி அந்த இளம்பெண்ணை மிரட்டி பணம் கேட்டு கணவனும் மனைவியும் மிரட்டியுள்ளனர். ஆனால் அவர்களின் தொல்லையால் பாதிக்கப்பட்ட பெண் திருப்பதி எம்.ஆர்.பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில், போலீசார் கணவன் - மனைவி இருவரையும் கைது செய்த எம்.ஆர்.பள்ளே போலீசார் சிறையில் அடைத்தனர்.
ஏற்கனவே இதேபோன்று வேறு ஒரு பெண்ணிடம் ரூ.5 லட்சம் வரை பணம் பறித்ததும், இவர்கள் வளையில் பலர் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பார்கள் என்பதால் அவர்கள் புகார் அளித்தால் அவர்களுக்கு கடும் தண்டனை பெற்று தரப்படும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.