ஊராட்சி மன்ற தலைவருடன் உறவு; கணவனை தீர்த்து கட்டிய மனைவி!!

 
tn

கள்ளகாதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி மற்றும் கூலிப்படை தலைவன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிவேல்.  இவரது மனைவி செல்வி.  இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். கடந்த 2ம் தேதி பழனிவேல் மர்மமான முறையில் கத்தி குத்து பட்டு சடலமாக கிடந்துள்ளார்.  இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பழனிவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  இதைத்தொடர்ந்து உயிரிழந்த பழனிவேலின் அக்கா சிவகாமி கொடுத்த புகாரின் பேரில் வெண்ணந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

murder

விசாரணையின் போது பழனிவேலின் மனைவி செல்வி மீது சந்தேகம் ஏற்பட்டது.  இதைத் தொடர்ந்து போலீசார் செல்வியின் செல்போன் எண்ணை ஆய்வு செய்தனர். இதையடுத்து பழனிவேல் மனைவி செல்வியிடம் நடத்திய தீவிர விசாரணையில் பழனிவேலும்,  ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமியும் நண்பர்களாக இருந்துள்ளனர். இதன் காரணமாக கந்தசாமி அடிக்கடி பழனிவேல் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். அப்போது பழனிவேல் மனைவிக்கும் ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.  இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது.. இதை கணவர் பழனிவேல் கண்டித்துள்ளார்.  இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

arrest

இதைத்தொடர்ந்து  கந்தசாமியும், செல்வியும் சேர்ந்து பழனிவேலை கொள்ள திட்டமிட்டுள்ளனர்.  இதன் காரணமாக கூலிப்படை ரவி என்பவரை இவர்கள் அணுகியதாக தெரிகிறது.  இதைத் தொடர்ந்து மது கொடுத்து பழனிவேலை கத்தியால் குத்தி கொலை செய்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.  இது தொடர்பாக காவல்துறையினர் பழனிவேலின் மனைவி செல்வி , கூலிப்படையை  சேர்ந்த ரவி ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.  தலைமறைவாக உள்ள கந்தசாமியை தீவிரமாக தேடி வருகின்றனர்.  கைது செய்யப்பட்ட இருவரும் ராசிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.