கணவனுக்கு குளிர்பானத்தில் மனைவி விஷம் கொடுத்ததாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்!

கடலூர் அருகே கணவனுக்கு குளிர்பானத்தில் மனைவி விஷம் கொடுத்ததாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக தன்னை ஏமாற்றிய மனைவியை பழிவாங்கவே கலையரசன் விஷம் குடித்து உயிரிழந்துள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் அயன் கருவேப்பம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனு ஒன்றினை அளித்தார். அந்த மனுவில் சுந்தரமூர்த்தியின் மகன் கலையரசன் என்பவருக்கு கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி ஷாலினி என்ற பெண்ணுடன் பெரியோர்கள் சம்மதத்துடன் திருமணம், நடைபெற்றுள்ளது. ஆனால் பெண் ஷாலினிக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்றும், அவர் வேறு ஒருவரை காதலிப்பதாகவும் திருமணம் முடிந்து முதல் இரவின் போது கூறியதாகவும், இதனால் கலையரசன் ஷாலினியை அவர்களின் வீட்டிற்கு அனுப்பி விட மீண்டும் அந்த பெண்ணின் சொந்தக்காரர்கள் எல்லாம் சில நாட்களில் சரியாக விடும் என்று கூறி விட்டு விட்டு சென்றுள்ளனர். இந்த நிலையில் கடந்த 20ம் தேதி ஷாலினி கூல்ட்ரிங்க்ஸில் விஷம் கலந்து கொடுத்து விட்டார் என்றும், இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு தற்போது கலையரசன் புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக கடலூர் புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் ஷாலினி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கலையரசனின் பெற்றோர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இந்நிலையில் கடலூர் அருகே கணவனுக்கு குளிர்பானத்தில் மனைவி விஷம் கொடுத்ததாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக தன்னை ஏமாற்றிய மனைவியை பழிவாங்கவே கலையரசன் விஷம் குடித்து உயிரிழந்துள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். திருமணமான 26வது நாளிலேயே கணவனுக்கு குளிர்பானத்தில் மனைவி விஷம் கொடுத்ததாக பரவும் தகவல் உண்மையல்ல எனக் கூறியுள்ள போலீசார், மருந்து கடைக்கு சென்று கலையரசன் வாங்கிய மருந்து ரசீது மற்றும் சிசிடிவி காட்சிகளை பறிமுதல் செய்துள்ளனர். மனைவியை பழிவாங்க விஷம் குடித்து கடலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கலையரசன் இன்று உயிரிழந்தார்.