திடீரென திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்; 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்

 
திடீரென திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள் கூட்டம்; 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்

உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய அண்ணாமலையார் திருக்கோயிலில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை முடியும் தருவாயில் உள்ள நிலையிலும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும், முகூர்த்த தினம் என்பதாலும் அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் 5 மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 5 மணி நேரம் வரிசையில் காத்திருந்து  சுவாமி தரிசனம் | After Waiting on Line for 5 Hours at Tiruvannamalai  Annamalaiyar Temple, Swamy Darshanam ...

அண்ணாமலையார் கோவிலில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு ஆகம விதிப்படி கோவில் நடை திறக்கப்பட்டு உண்ணாமுலை அம்மன் உடனாகிய அண்ணாமலையாருக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்தனர். அதனை தொடர்ந்து அதிகாலை முதல் பக்தர்கள் கிழக்கு திசையில் அமைந்துள்ள ராஜகோபுரம் நுழைவு வாயில் வழியாக வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்துவிட்டு பின்னர் திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே செல்கின்றனர்.

அண்ணாமலையார் திருக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் அமைந்துள்ள பெரிய நாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து மலர் மாலை அணிவித்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மகா தீபாராதனை நடைபெற்றது. வழக்கமாக  அண்ணாமலையார் திருக்கோவிலில் சனி மற்றும் ஞாயிறு மட்டுமில்லாமல் விடுமுறை தினங்களில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் அதிக அளவில் வருகை புரிந்து வரும் நிலையில் தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும், முகூர்த்த தினம் என்பதாலும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதே போன்று ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநில பக்தர்களும் அண்ணாமலையார் கோவிலுக்கு அதிக அளவு வருகை புரிந்ததால் கூட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக இன்று அதிகாலையிலிருந்து நீண்ட வரிசையில் தரையில் அமர்ந்து காத்திருந்த பக்தர்கள் 5 மணி நேரத்திற்கு பிறகு அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். அதோடு மட்டுமில்லாமல் கோவிலுக்கு வருகைபுரியும் பக்தர்கள்  வெயிலில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளும்  வகையில் கோவில் வளாகம் முழுவதும் தேங்காய் நாற் விரிப்புகள் பக்தர்களின் கால் பாதங்கள் சுடாதவாறு போடப்பட்டுள்ளது. நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு திருக்கோவில் சார்பாக திருக்கோவில் முழுவதும் நீர்மோர் மற்றும் குடிநீர் வழங்கப்படும் வருகின்றது.