தேர்வு எழுதி கொண்டிருந்த மாணவி திடீரென பாதியிலேயே எழுந்து சென்று 3-வது மாடியில் இருந்து குதித்ததால் பரபரப்பு

 
ச்

சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தேர்வு எழுதி கொண்டிருந்த மாணவி திடீரெனபாதியிலேயே எழுந்து சென்று 3 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் அருகே 5வது மாடியில் இருந்து குதித்து மருத்துவ கல்லூரி மாணவி  தற்கொலை: காதல் தோல்வி காரணமா?


சென்னை புளியந்தோப்பு வ.உ.சி நகர் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் தாஜூதீன். இவர் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இவரது மகள் ஹாசீயா(19) சென்னை கோபாலபுரம் பகுதியில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் பிபிஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். தற்போது கல்லூரியில் (இன்டர்னல் அசிஸ்டென்ட்) தேர்வு நடைபெற்று வருவதால் காலை வழக்கம் போல் மாணவி ஹாசீயா கல்லூரிக்கு தேர்வு எழுத சென்றார். தேர்வு அறையில் தேர்வு எழுதி கொண்டிருந்த மாணவி திடீரென பாதியிலேயே தேர்வு எழுதுவதை நிறுத்தி விட்டு வெளியே ஓடிவந்து 3 வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கல்லூரி நிர்வாகம் மற்றும் சக மாணவர்கள் உடனே ஓடிச்சென்று மாணவி ஹாசீயாவை மீட்டு மைலாப்பூரில் உள்ள பிரபல உள்ள தனியார் மருத்துவமனையில் (இசபெல்லா) சிகிச்சைக்காக சேர்த்தனர். இடுப்பு மற்றும் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு மிகவும் கவலைக்கிடமான முறையில் அனுமதிக்கப்பட்ட மாணவிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 

பின்னர் இந்த சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகம் தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட மாணவி ஹாசீயாவின்,சகோதரி ஃபாத்திமா என்பவர் கடந்த இரு வருடங்களுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்ததும் அன்று முதல் சகோதரி இறந்த துக்கம் தாளாமல் மன அழுத்தம் ஏற்பட்டு தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்தது. மன அழுத்திற்கு ஆளாகி தொடர் சிகிச்சை பெற்று வந்த மாணவி ஹாசீயா இன்று கல்லூரிக்கு தேர்வு எழுத வந்த நிலையில் தேர்வை பாதியிலேயே நிறுத்தி விட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும் மாணவி தற்கொலை முயற்சி சம்பவம் குறித்து சக மாணவிகள் மற்றும் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.