வர தட்சணை கொடுமையால் தற்கொலைக்கு முயன்ற மனைவி..தலைமறைவான கணவனை கைது செய்த போலீசார்!

 

வர தட்சணை கொடுமையால் தற்கொலைக்கு முயன்ற மனைவி..தலைமறைவான கணவனை கைது செய்த போலீசார்!

திருமணம் செய்து கொண்ட பெண்ணிடம் வரதட்சணை கேட்பது குற்றம் என்றாலும், இன்னும் பல இடங்களில் வரதட்சணை கொடுமை நடந்து கொண்டு தான் இருக்கிறது. இது போன்ற சம்பவம் சென்னையிலும் நடந்துள்ளது.

சென்னை மதுரவாயல் பகுதியில் வசித்து வரும் தம்பதி செந்தில்நாதன்- நாகநந்தினி. இந்த தம்பதிக்கு ஒரு ஆண்டுக்கு முன்னரே திருமணம் ஆன நிலையில், செந்தில்நாதன் அவரது தாய் மற்றும் தங்கையுடன் சேர்ந்து வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியுள்ளார். இவ்வாறு பல நாட்களாக நாகநந்தினியை கொடுமை படுத்தியதாக தெரிகிறது. இதனிடையே கடந்த 25 ஆம் தேதி தான் வேறு திருமணம் செய்து கொள்ள போவதாக செந்தில்நாதன் கூறியிருக்கிறார்.

வர தட்சணை கொடுமையால் தற்கொலைக்கு முயன்ற மனைவி..தலைமறைவான கணவனை கைது செய்த போலீசார்!

இதனால் மனமுடைந்த நந்தினி, 2 ஆவது மாடியில் இருந்து தற்கொலை முயற்சி செய்திருக்கிறார். இதில் நந்தினி உயிர் தப்பிய நிலையில், அவருக்கு இரண்டு கால்களும் முறிந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் நந்தினியின் தற்கொலை முயற்சிக்கு காரணமாக இருந்த செந்தில்நாதனை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், நந்தினியிடம் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.