பற்களை பிடுங்கிய விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்தோருக்கு மீண்டும் பணி

 
tn

பற்களை பிடுங்கிய விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்தோருக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது.

nellai

நெல்லையில் ஏஎஸ்பியாக இருந்த பல்வீர் சிங் விசாரணைக்காக அழைத்து வரப்படும் கைதிகளின் பற்களை பிடுங்கியதாக அடுக்கடுக்கான புகார்கள் எழுந்த நிலையில்,  பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது.  விசாரணை குழுவின் அமுதா ஐஏஎஸ் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் 10 மற்றும் 17ஆம் தேதிகளில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. உயர்மட்ட குழு விசாரணை குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து 17 வயது  சிறுவனின் பற்கள் பிடுங்கப்பட்டதாக வந்த புகாரின் அடிப்படையில் ஏஎஸ்பியாக இருந்த பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அத்துடன் சிலர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டனர். இதையடுத்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது .அத்துடன் பல்வீர் சிங் மீது மூன்று பிரிவுகளின் கீழ் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அத்துடன் பல் பிடுங்கிய விவகாரத்தில் நெல்லை அம்பாசமுத்திரம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலைய காவலர்கள் 24 பேர் பணியிட  மாற்றம் செய்து நெல்லை மாவட்ட எஸ்பி சிலம்பரசன் உத்தரவு பிறப்பித்தார்.

காவல் நிலையத்தில் அமுதா

இந்நிலையில் கைதிகளின் பற்களை பிடுங்கிய  விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த மூன்று பேருக்கும் மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது.  கல்லிடைக்குறிச்சி ஆய்வாளராக இருந்த ராஜகுமாரி குற்றாலம் காவல் ஆய்வாளராகவும்,  விக்கிரமசிங்கபுரம் காவல் ஆய்வாளராக இருந்த பெருமாள் மணவாளக்குறிச்சி வட்டத்தின் ஆய்வாளராகவும்,  உளவு பிரிவு காவல் ஆய்வாளராக இருந்த கோமதி, மார்த்தாண்டம் காவல் ஆய்வாளராகவும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்