திருமண மண்டபத்தின் செப்டிக் டேங்கில் விழுந்து பெண் பலி

 
death

கன்னியாகுமரி மாவட்டம் வேர்கிளம்பி அருகே  ஒட்டலிவிளை  பகுதியில்  திருமண மண்டபத்தில் கழிவறை செப்டிக் டேங்  உடைந்த விழுந்த விபத்தில் பெண் உயிரிழந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் வேர்கிளம்பி அருகே ஒட்டலிவிளை பகுதியில் ஊர் திருமண மண்டபம் அமைத்துள்ளது. இந்த சிறிய திருமணமண்டபத்தில் இன்று அப்பகுதியை சேர்ந்த அஜித் ரோமியோ என்பவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இதில் முதலார்  பகுதியை சேர்ந்த பால் வெட்டும் தொழிலாளியான மோகன்தாஸ் மற்றும் அவரது மனைவி  சுஜிஜா(48)ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக கழிவறை செப்டிடேங் உடைந்துவிழுந்தது இதில் மோகன்தாஸ் மற்றும் அவரது மனைவி சுஜிஜா ஆகியோர் விழுந்ததனர். 

இதையடுத்து அப்பகுதியினர்  கொடுத்த தகவலின் அடிப்படையில் குலசேகரம் தீயணைப்பு துறையினர் அப்பகுதிக்கு விரைந்தனர். அந்த தீயணைப்பு வாகனத்தை தீயணைப்பு துறை ஓட்டுனன் சுஜின் என்பவர் ஓட்டிவந்தார். மாத்தூர் தொட்டிப்பாலம் அருகே குறுகிய சாலையில் தீயணைப்பு வாகனம் வந்தபோது எதிர்பாராதவிதமாக  ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்து கால்வாயில் கவிழ்ந்தது. இதையடுத்து தக்கலை தீயணைப்புதுறையினரின்   உதவியோடு  செப்டிடேங்கில் விழுந்த மோகன்தாஸ் மற்றும் அவரது மனைவி சுஜிஜா ஆகியோர்களை மீட்கும் முயற்சியில் தீயணைப்புதுறையினர் ஈடுபட்டனர். இதில் இடிபாடுகளில் சிக்கி சுஜிஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது கணவர் மோகன்தாஸ் லேசா காயங்களுடன் மீட்கபட்டார்.

இது குறித்து திருவட்டார் காவல்துறையினர் வழக்குபதிவு மேற்கொண்டு விசாரணை நடத்திவருகின்றனர். இதேபோல் மீட்கவந்த தீயணைப்புதுறை வாகனம் கால்வாயில் விழுந்த விபத்து குறித்தும் வழக்குபதிவு செய்தனர். திருமணமண்டபத்தில் செப்டிடேங் உடைந்துவிழந்ததில் பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.