ஜெயலலிதாவின் 11 ஆயிரம் சேலைகள் ஏலம் விடப்படுமா? இன்று விசாரணை

 
ஜ்ஜ்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 11, 344 விலை உயர்ந்த சேலைகள்,  750 ஜோடி காலனிகள் உட்பட விலை உயர்ந்த பொருட்கள் ஏலம் விடப்பட வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. 

 ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகர் ஆகிய நான்கு பேரும் மீது சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது .  இந்த வழக்கில் ஜெயலலிதா உட்பட நான்கு பேருக்கு தலா நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் .  இந்த தீர்ப்பை எதிர்த்து நாலு பேரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.  தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

ஜ்ஜ்ஜ்

 கர்நாடக அரசு இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு மேல்முறையீடு செய்தது.  இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பெங்களூரு தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது.   இந்த தீர்ப்பு வழங்கப்பட்ட போது ஜெயலலிதா உயிருடன் இல்லை .  அதனால் தீர்ப்பிலிருந்து அவரது பெயர் நீக்கப்பட்டது.   சசிகலா உட்பட 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். 

 தண்டனை காலம் நிறைவடைந்து அவர்கள் விடுதலையாகி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.  இந்த நிலையில் சொத்து குவிப்பு வழக்கின் போது ஜெயலலிதாவின் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட விலை உயர்ந்த பொருட்களில் 11 ஆயிரத்து 344 சேலைகள்,  750 ஜோடி காலணிகள்,  250 சால்வைகள் உள்ளிட்டவை நீண்ட நாட்களாக கருவூலத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன. 

ச்

 அவையெல்லாம் நிறம் மங்கி கிழிந்து விடும்.   அதனால் அவற்றை மட்டுமாவது ஏலம் விட்டு அதில் கிடைக்கின்ற பணத்தை அரசு கருவூலத்தில் சேர்க்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி உச்சநீதிமன்றத்திற்கு கடிதம் அனுப்பி இருந்தார்.   அந்த கடிதத்தின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்  வழங்குமாறு அவர் கூறியிருந்தார்.  அதற்கு மத்திய தகவல் ஆணையம் உரிய பதவி அளிக்கவில்லை. 

 இந்த நிலையில் மீண்டும் உச்ச நீதிமன்றத்திற்கு ஒரு கடிதம் அனுப்பி தனக்கு உரிய தகவலை வழங்கும்படி மத்திய தகவல் ஆணையத்திற்கு உத்தரவிடுமாறு கேட்டுக் கொண்டிருந்தார்.    இந்த மனு மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது.