கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும், மகனும் விஷமருந்தி தற்கொலை

 
death

சாத்தூரில் கணவர் இறந்த 30வது நாளில் அவரின் இறப்பை தாங்க முடியாமல் மனைவி, மகன் இருவரும் தந்தையைத் தேடி செல்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முரளி பாரதி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சிதம்பரம் நகரைச் சேர்ந்தவர் சிதம்பரம். இவர் சாத்தூர் தனியார் வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்று 10 ஆண்டுகள் ஆன நிலையில் கடந்த 30 தினங்களுக்கு முன்பு திடீரென மாரடைப்பால் உயிர் இழந்தார். இவரது மனைவி சுபா 55 ஒரு மகன் முரளி பாரதி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். மகள்களுக்கு திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வருகின்றனர். மகன் படித்து முடித்து வீட்டில் இருந்துள்ளார். 

 நிலையில் சிதம்பரம் உயிரிழந்த துக்கத்தில் கடந்த ஒரு மாத காலமாக தாய் மற்றும் மகன்  மிகவும் சோகத்தில் இருந்த நிலையில், சுபா மற்றும் மகன் முரளி பாரதி  கணவரின்  30வது நாள்  நினைவு தினத்தை  அனுசரித்துவிட்டு துக்கம் தாங்க முடியாமல் இருவரும் விஷம் அறிந்து தற்கொலை செய்து கொண்டனர். அக்கம்பக்கத்தினர் கதவு திறந்து நிலையில் இருவரும் வீழ்ந்து கிடந்ததை கண்டு சாத்தூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தூர் டவுன் போலீசார் உடலை கைப்பற்றி சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தாய், மகன் இருவரும் தங்களது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என தனித்தனியே  எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் தாய், மகன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சாத்தூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது