#Breaking ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால் ஆதரவு - ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

 
ops and nadda

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால் ஆதரவு அளிப்போம் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். 

ops

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் போட்டியிடும் நிலையில், காங்கிரஸை எதிர்த்து அதிமுக களம் காண்கிறது. தற்போது அதிமுக பல்வேறு பிரிவுகளாக பிளவுப்பட்டுள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  அந்த வகையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், "எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பதை தான் நாங்கள் விரும்புகிறோம்.  அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள கட்சியினர் எங்களுடன் பேசி வருகின்றனர் . எங்களை பொறுத்தவரை எப்போதும் ஒன்றாக செயல்பட வேண்டும் என்பதுதான் எண்ணம்.  இதை தான் தொடக்கம் முதல் கூறி வருகிறேன். குழப்பத்தை உருவாக்கியது நாங்கள் கிடையாது" என்றார்

ops

தொடர்ந்து பேசிய அவர் , "அதிமுக சார்பில் இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிடுகிறோம்.  இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த எங்களுக்கே முழு உரிமை உள்ளது.  தேர்தல் ஆணைய பி படிவத்தில் கையெழுத்திட நான் தயாராக உள்ளேன்.  உள்ளாட்சி தேர்தலில் இரட்டை இலை சின்னம் கிடைக்காமல் போனதற்கு நான் காரணம் அல்ல. அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் என் எண்ணம். அதே சமயம் பாஜக போட்டியிட்டால் நாங்கள் ஆதரவளிப்போம்.  பாஜக தேசிய கட்சியாக இருப்பதால் அவர்கள் போட்டியிட்டால் நல்ல வாய்ப்பாக இருக்கும்.  இரட்டை இலை கிடைக்காவிட்டால் தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சின்னத்தில் போட்டியிடுவோம். ஈரோடு இடைத்தேர்தலில் எங்கள் தரப்பில் போட்டியிடும் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார். ஒருங்கிணைந்து செயல்படுவது தொடர்பாக இதுவரை ஈபிஎஸ் தரப்புடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.ஈபிஎஸ் தரப்புடன் பேச்சுவார்த்தைக்கு இப்போதும் தயாராக உள்ளோம். அதிமுக பழைய நிலைக்கு வரும் வரை  சட்டப் போராட்டம் தொடரும் என்றார்.