செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு 1000 கன அடியாக அதிகரிப்பு..

 
 செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு 1000 கன அடியாக அதிகரிப்பு..

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு 1000 கன அடியாக உயர்ந்துள்ளது.   

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள் நிரம்பி வருகிறது.  சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையினால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மக்கள் பாதுகாப்பு கருதி, முன்னதாகவே  செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து செல்லக்கூடிய உபரி நீர்  கால்வாய் முழுவதும் தூர்வாரப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டது.  
 செம்பரம்பாக்கம் ஏரி
 இந்த நிலையில் கடந்த  சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக  செம்பரம்பாக்கம் ஏரிக்கு  நீர்வரத்தானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.   இதன் காரணமாக  24  அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம்,  தற்போது 21 அடியாக  உயர்ந்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கனவே  செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில்,  இன்று பிற்பகலில் இருந்து   நீர்திறப்பு 1000 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.   ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் இன்னும் கூடுதலாக உபரி நீர் திறக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏரியின் நீட் மட்டத்தை 21 அடியில் வைத்து கண்காணிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.