விநாயகர் சதுர்த்தி விழா: அசம்பாவிதம் நேர்ந்தால் நீங்கள்தான் பொறுப்பு - நிபந்தனைகள் விதித்த நீதிமன்றம்..
விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு நிபந்தனைகளுடன் உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது.
விநாயகர் சதுர்த்தி விழா 2 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு முழுவதும் கோலாகலமாகா கொண்டாப்பட்டு வருகியது. சதுர்த்தி விழவை முன்னிட்டு விநாயகர் சிலைகள் வைத்து வழிபடும் நிகழ்ச்சியும், 2 நாட்கள் கழித்து அந்த சிலைகள் நீர் நிலைகள் கரைக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும். இதனையொட்டி மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி போன்ற பல்வேறு மாவட்டங்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகளை நீதிபதி முரளி சங்கர் நேற்று மாலை வரை விசாரித்தார். அதற்கான உத்தரவு தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதில், விநாயகர் சதூர்த்தி கொண்டாட அனுமதி கேட்ட அனைத்து மனுக்களும் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது. அதாவது, விநாயகர் சதுர்த்தி விழாவில் ஆபாச நடனங்களோ, அநாகரீகமான உரையாடல்களோ இடம் பெறக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் எந்த ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி, சாதி, சங்கம் போன்றவற்றை குறிப்பிடும் விதத்தில் பாடல்களோ அல்லது உரையாடல்களோ, அவர்களை விமர்சிக்கும் விதமான நடனங்களோ இடம் பெறக்கூடாது என்றும் நீதிபதி தெரிவித்தார். அதேபோல் அரசியல் கட்சியை சார்ந்த தலைவர்களின் படங்கள் மற்றும் பிளக்ஸ் பேனர்களும் இருக்க கூடாது என்றும், இந்த விழாவானது மதம் மற்றும் மத நல்லிணக்கத்தை பாதிக்காமல் இருக்க வேண்டும் என்றும், சாதி ரீதியான எந்த பாகுபாடும் இந்த விழாவில் காட்ட கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
அதுமட்டுமின்றி இந்த விழாவில் கலந்துகொள்ள கூடியவர்கள் மது அருந்தல், குட்கா போன்ற போதை பொருட்களை பயன்படுத்த கூடாது என்றும், விநாரகர் சிலை ஊர்வலத்தின்போது பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இருக்க கூடாது என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனை மீறி ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால், வழக்கு தாக்கல் செய்தவர்களும், விழா ஏற்பாட்டாளர்களுமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நீதிமன்றத்தின் உத்தரவுகள் மீறும்பட்சத்தில் காவல்துறையினர் சுதந்திரமாக நடவடிக்கை எடுக்கலாம் எனவும் நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.