குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய விஜயகாந்த்..
தை மாதத்தின் முதல் நாளான இன்று பொங்கல் பண்டிகையை தமிழகத்தில் மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் விருகம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தினருடன் சேர்ந்து பொங்கல் கொண்டாடினார்.
கொரோனா கட்டுப்பாடு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக உற்சாகத்தை இழந்த இந்த பொங்கல் பண்டிகையானது தற்போது எந்த விட கட்டுப்பாடும் இல்லாத நிலையில் தமிழகத்தில் களைகட்டி உள்ளது. இந்த பொங்கல் பண்டிகையானது அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கும், இயற்கைக்கும், உழவுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக தை மாத முதல் நாளான இன்று பொங்கல் பண்டிகை தமிழகத்தில் கோலாகலமாக கொண்டாட வருகின்றனர்.
அதன்படி தமிழகம் முழுவதும் அதிகாலையில் இருந்தே மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்தும், வாசலில் வண்ண கோலமிட்டும், பொங்கல் பானைக்கு மஞ்சள் குங்குமம் வைத்தும், மஞ்சள் கொம்பு செடியை கட்டி மங்களகரமாக, பூத்தரிசியில் பொங்கலிட்டு உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். பொங்கல் பொங்கி வருகின்றபோது பொங்கலோ பொங்கல் எனக் கூறி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அந்த வகையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் விருகம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தினருடன் சேர்ந்து பொங்கல் பண்டிகை கொண்டாடினார்.