‘வாரிசு’ டிக்கெட் கிடைக்கவில்லை! முதல்வரிடம் விஜய் ரசிகர்கள் புகார்

 
விஜய் ரசிகர்கள்

புதுச்சேரியில் எம்எல்ஏக்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், அதிகாரிகள் அழுத்தத்தால் வாரிசு படத்துக்கு டிக்கெட்டை தியேட்டர்கள் தர மறுப்பதாக சட்டப்பேரவைக்கு வந்து முதல்வர் ரங்கசாமியை சந்தித்து விஜய் ரசிகர்கள் புகார் அளித்தனர். 

புதுச்சேரி சட்டப்பேரவை முன்பாக விஜய் நற்பணி இயக்கத்தினர் கொடிகளுடன் இன்று திரண்டனர். முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேச வேண்டும் என்றனர். இதையடுத்து பத்து நிர்வாகிகளை முதல்வர் அறைக்கு அழைத்து சென்றனர். அப்போது தியேட்டர்களில் வாரிசு படத்துக்கு ரசிகர்களுக்கு டிக்கெட் தரவில்லை. முன்னாள், இந்நாள் எம்எல்ஏக்கள், அதிகாரிகள் டிக்கெட் வாங்கி சென்றுவிட்டதாக ரசிகர்களுக்கு தரவில்லை. 

இதையடுத்து ஆட்சியர் வல்லவனை அழைத்து முதல்வர் ரங்கசாமி பேசினார். கடந்த முறைபீ ஸ்ட் படத்துக்கு தந்ததுபோல் இம்முறையும் தருவதாக வாக்குறுதி தரப்பட்டது. இதுகுறித்து விஜய் ரசிகர்கள் கூறுகையில், வாரிசு படத்துக்கு ரசிகர் ஷோ தருவதாக திரையரங்கு தரப்பில் இழுக்கடிக்கிறார்கள். அதிகாரிகள் பிரஷரால் டிக்கெட் தர மறுத்தனர். அத்துடன் தொகுதியிலுள்ள முன்னாள் எம்எல்ஏக்கள், தற்போதைய எம்எல்ஏக்கள் டிக்கெட் கேட்டுள்ளதாக ரசிகர்களுக்கு தரவில்லை. இதையடுத்து முதல்வரை சந்தித்தோம். பீஸ்ட் படத்துக்கு செய்தது போல் 50 சத டிக்கெட் ரசிகர்களுக்கு தர சொல்லியுள்ளார். எம்எல்ஏக்களுக்கு டிக்கெட் வேண்டுமானால் எங்கள் இயக்கத்தில் சேர்ந்தால் தேவையான டிக்கெட்டுகளை புஸ்ஸி ஆனந்த் மூலம் தர தயாராக உள்ளோம்” என்றனர்.