சென்னைக்கு படையெடுக்கும் வாகனங்கள் - சுங்கசாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்

 
போக்குவரத்து நெரிசல்

 தொடர் விடுமுறை காரணமாக மதுராந்தகம் அருகே தேசிய  நெடுஞ்சாலையில் சுங்கசாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மதுராந்தகம் புறவழிச் சாலையில் போக்குவரத்து நெரிசல்


செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆத்தூர் சுங்கசாவடியில் தொடர் விடுமுறை காரணமாக போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் கடந்த 13ஆம் தேதி முதல் தென்மாவட்டத்திற்கு கடந்த 3 நாட்கள் தொடர்ந்து சென்ற வாகனங்கள் அனைத்தும் நாளை பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வழக்கம்போல் செயல்படும் என்பதால் ஒரே நேரத்தில் சென்னைக்கு படையெடுக்கின்றன. இதனால் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இன்று காலை முதல் வாகனங்கள் வந்த நிலையில் இருந்தன.ஆனால் மாலை பொழுது என்பதால் கூடுதலாக வாகனங்கள் வந்ததால் சுங்கசாவடி நிர்வாகம் கூடுதலாக கவுண்டர்களை திறந்து வாகனங்களை அனுமதித்தாலும் அதையும் மீறி இந்த போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. மேலும் மதுராந்தகம் புறவழி சாலையில் திருச்சி- சென்னை மார்க்க சாலையில் மூன்று கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்டன. நல்வாய்ப்பாக இதில் யாருக்கும் எந்தவித காயமும் உயிர் சேதமும் ஏற்படவில்லை. ஆனால் விபத்தால் சுமார் 3 கிலோமீட்டார் தூரம் வரை போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திர்க்கு ஆளாகினர்.