சங்கரன்கோவில் தீண்டாமை அவலம் : குற்றவாளிகள் ஊருக்குள் நுழைய தடை, விஏஓ மாற்றம்..

 
tn

சங்கரன்கோவில் அருகே தீண்டாமை கொடுமை நடைபெற்ற பஞ்சாகுளத்தில் கிராம நிர்வாக அலுவலராக கூடுதல்  பொறுப்பு வகித்து வந்த மல்லிகா அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.  

கைது

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே பாஞ்சாகுளம் கிராமத்தில் பணம் கொடுத்து திண்பண்டம் வாங்க வந்த  பட்டியலின மாணவர்களுக்கு , பெட்டிக்கடை உரிமையாலர் திண்பண்டங்கள் வழங்க மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பட்டியலினத்தவர்களுக்கு பொருட்கள் தரக்கூடாது என ஊர் கட்டுப்பாடு விதித்திருப்பதாகவும், இனிமேல் யாரும் திண்பண்டங்கள் வாங்க கடைக்கு  வர வேண்டாம் என்றும்,  இனி பொருட்கள் தரமாட்டார்கள் என வீட்டில் போய் சொல்லுங்கள் என்றும் அந்த கடை உரிமையாளர் அந்தச் சிறுவர்களிடம் கூறி அனுப்புகிறார்.   இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சங்கரன்கோவில்  தீண்டாமை அவலம் :  குற்றவாளிகள் ஊருக்குள் நுழைய தடை, விஏஓ மாற்றம்..

அந்த வீடியோ வைரலானதை அடுத்து,    பெட்டிக்கடை  சீல் வைக்கப்பட்டு  அதன்  உரிமையாளர் மகேஷ்வரன் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர்  வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன்   இந்த சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட  கடை உரிமையாளர் உள்ளிட்ட 5 பேர்  ஊருக்குள் நுழையவும்  தடை விதிக்கப்பட்டுள்ளது.  பட்டியலின மக்களுக்கு எதிராக குற்றம்புரிவோரை சில காலத்திற்கு அவ்விடத்தை விட்டு வெளியேற்றும் சட்டப்பிரிவில்  இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க்  தெரிவித்திருக்கிறார்.  இந்த நிலையில், பாஞ்சாகுளத்தில் கிராம நிர்வாக அலுவலராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்த மல்லிகா, அந்தப்  பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்.  புதிய கிராம நிர்வாக அலுவலராக மாரியப்பன் என்பவரை நியமனம் செய்து  சங்கரன்கோவில் கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.