மன உளைச்சலில் இந்திய மருத்துவ மாணவர்கள் - மத்திய அரசுக்கு ஜி.கே. வாசன் கோரிக்கை!!

 
tn

இந்திய மாணவர்கள் தங்கள் மருத்துவ படிப்பு தங்குதடையிலாமல் தொடர உக்ரைன் நாட்டுடன் பேசி ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்று ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார் .

இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான ஜி.கே. வாசன், ரஷ்யா - உக்ரைன் இடையே நடைபெறும் போரால் பல்வேறு நாடுகள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு இருக்கிறது . அதோடு உக்ரைன் மக்களின் கல்வியில் பெரும் பாதிப்பிற்குள்ளாகி வருகிறார்கள் . இதில் இந்திய மாணவர்கள் பல்லாயிரம் பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர் . ரஷ்யா - உக்ரைன் இடையே நடைபெறும் போர் கடந்த நூறு நாட்களுக்கு மேலாக நடந்துவந்த நிலையில் இது வரை எந்த முடிவுக்கும் வரவில்லை . இன்னிலையில் உக்ரைன் நாட்டில் மருத்துவம் பயின்று வரும் இந்திய மாணவர்கள் படிப்பை தொடர முடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ukraine attack

உயிருக்கு உத்திரவாதம் இல்லாத சூழ்நிலையில் மத்திய “ ஆப்ரேசன் கங்கா ” திட்டத்தின் மூலம் இந்திய மாணவர்களை பாதுகாப்பாக இந்தியாவிற்கு வரவழைக்கப்பட்டனர் . இது மிகுந்த பாராட்டுக்குரியது .  உக்ரைன் போரினால் மூடப்பட்டுள்ள மருத்துவ கல்லூரிகள் , மருத்துவ பல்கலைகழங்கள் ஆன்லைனில் இந்திய மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்தியது . மருத்துவப் படிப்பு ஆன்லைனில் என்பது மற்றப் படிப்புகளைப் போல இல்லை . செய்முறை பயிற்சியொடு கூடிய படிப்பு தொடர வேண்டும் . அப்பொழுதுதான் அது முழுமை பெறும் . கல்லூரிக்கும் செல்ல முடியாமல் , ஆன்லைனிலும் முழுயைாக படிக்க இயலாமல் , இந்திய மாணவர்கள் பரிதவித்து வருகின்றனர்.

gk

இச்சூழலில் உக்ரைன் மருத்துவ பல்கலைக்கழகங்கள் நீங்கள் படிப்பை தொடர விரும்பினால் ஆகஸ்டு மாதம் இறுதிக்குள் வரவேண்டும் என்று நிர்பந்தம் செய்கிறது . அதோடு செமஸ்டர் கட்டணங்களை உடனடியாக கட்டச்சொல்கிறது . இல்லையென்றால் உங்கள் படிப்பு அங்கீகாரம் பெறாது என்று கூறப்படுகிறது . இதனால் மருத்துவ மாணவர்களும் , பெற்றோர்களும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்கள் .  ஆகவே இந்திய அரசும் , தேசிய மருத்துவக் கவுன்சிலும் உடனடியாக இந்த பிரச்சனையில் ஓர் தீர்வு காண வேண்டும் . மேலும் மத்திய அரசு , இந்திய மாணவர்கள் தங்கள் மருத்துவ படிப்பு தங்குதடையிலாமல் தொடர உக்ரைன் நாட்டுடன் பேசி ஒரு நல்ல முடிவுக்கு வரவேண்டும் . இல்லையென்றால் இந்திய மாணவர்கள் தங்கள் தாய் நாட்டிலேயே படிப்பை தொடர மாற்றுயேற்பாடு செய்வதற்கான பெற்றோர்களின் வேண்டுகோளை அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் " என்று குறிப்பிட்டுள்ளார்.