மிகப்பெரிய பொறுப்பாக பார்க்கிறேன் - உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சி

 
udhayanidhi stalin

திமுகவின் இளைஞரணி செயலாளர் பொறுப்பு மீண்டும் வழங்கப்பட்டிருப்பதை மிகப்பெரிய பொறுப்பாக பார்க்கிறேன் என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.  

திமுகவில், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாநில இளைஞர் அணி செயலாளர், துணை செயலாளர்கள் மற்றும் மாநில மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி செயலாளர் மற்றும் இணை, துணைச் செயலாளர்கள், பிரச்சாரக்குழு செயலாளர்கள் மற்றும் மகளிர் அணி சமூக வலைதள பொறுப்பாளர்கள், ஆலோசனைக்குழு நியமனம் உள்ளிட்டவற்றை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டார். அதன்படி திமுகவின், இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் இளைஞரணி துணை செயலாளர்களாக, எஸ்.ஜோயல், ந, ரகுபதி, நா.இளையராஜா உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மகளிர் அணி தலைவராக விஜயா தாயன்பன் நியமிக்கப்பட்டுள்ளார். மகளிர் அணி செயலாளராக ஹெலன் டேவிட்சன் நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில், திமுகவின் இளைஞரணி செயலாளராக மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளது குறித்து உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, திமுகவின் இளைஞரணி செயலாளர் பொறுப்பு மீண்டும் வழங்கப்பட்டிருப்பதை மிகப்பெரிய பொறுப்பாக பார்க்கிறேன் என கூறினார்.