அதிமுகவை நாம் விமர்சிக்க வேண்டாம்; அவர்களே விமர்சித்து அடித்துக்கொள்வார்கள்- உதயநிதி ஸ்டாலின்

 
udhayanidhi stalin

அதிமுகவை நாம் விமர்சிக்க வேண்டியதில்லை அவர்களே அவர்களை விமர்சித்து தாக்கி கொள்வார்கள், அதனை கடந்த நான்கு நாட்களாக நீங்கள் அனைவரும் பார்த்து வருகின்றீர்கள் என திமுக சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Udhayanidhi tells party units to refrain from passing resolutions to make  him minister | The News Minute

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்கக் கூட்டம் மற்றும் திமுக கழக மூத்தோர்களுக்கு பொற்கிழி வழங்கும் விழா நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே கலைஞர் திடலில் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் திமுக இளைஞர் அணிச் செயலாளர், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதிஸ்டாலின் பங்கேற்றார். 

விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “மூன்று மாதங்களில் கிருஷ்ணகிரி , செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு பொற்கிழி வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் என்னிடம் கொடுத்த மனுக்களை முதல்வரிடம் கொடுத்துள்ளேன். நல்ல தீர்வு கிடைக்கும் என நம்பிக்கை வைத்துள்ளேன்,  அதிமுகவை நாம் யாரும் விமர்சிக்க வேண்டியதில்லை அவர்களே அவர்களை தாக்கிகொள்வார்கள். அதனை கடந்த  நான்கு நாட்களாக நீங்கள் அனைவரும் பார்த்து வருகின்றீர்கள்” என பேசினார்.