தூத்துக்குடி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை!!

 
tuticorin

பனிமய மாதா ஆலய திருவிழாவையொட்டி நாளை தூத்துக்குடி  மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

local holiday

தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பனிமய மாதா பேராலயம் அமைந்துள்ளது. இங்கு மத வேறுபாடு இன்றி பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது உண்டு.  அந்த வகையில் கடந்த 26 ஆம் தேதி பனி மயமாதா பேராலய திருவிழாவையொட்டி கொடியேற்றம் நடைபெற்றது.  நாளை இவ்விழாவின் முக்கிய நிகழ்வான அன்னையின் தேர்பவனி நடைபெற இருக்கிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தூத்துக்குடி தூய பனிமய மாதா திருவிழா : பக்தர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!

இந்நிலையில் பனி மயமாதா பேராலய திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறையை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தூத்துக்குடி தூய பனிமய  மாதா திருத்தல பேராலய திருவிழா (ஆகஸ்ட் 5ஆம் தேதி) நாளை கொண்டாடப்படுகிறது . இதை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நாளை உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது.  இருப்பினும் அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் இந்த விடுப்பு பொருந்தாது.  

தூத்துக்குடி தூய பனிமய மாதா திருவிழா : பக்தர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!

இது செலவானி முறிவு சட்டத்தின்படி பொது விடுமுறை நாள் அல்ல என்பதால் இதற்கு பதிலாக ஆகஸ்ட் 13ஆம் தேதி அலுவலகம் நாளாக கருதப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பக்தர்கள் இன்றி பனி மயமாதா பேராலயத்தின் திருவிழா நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது
.