திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமுறை

 
j

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  கனமழை எச்சரிக்கையின் காரணமாக இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது .  அம்மாவட்ட ஆட்சியர் இந்த உத்தரவை அறிவித்துள்ளார்.

 வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று தென்மேற்கு வங்க கடலில் இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டி நிலவுகிறது .  இது அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெற்று தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.  

s

 இதனால் நாளை 11ஆம் தேதி திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்  மிக கனமழை பெய்யும்.   சென்னை ,செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், திருச்,சி தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும்,  மிக கனமழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது .

இந்நிலையில் கனமழையின்  எச்சரிக்கையின் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி , கல்லூரிகளுக்கு ஒரு நாள் விடுமுறை அளித்து உத்தரவிட்டு உள்ளார் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ்.