நாமக்கல், நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

 
local holiday

அதிகனமழை எச்சரிக்கை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் நாளை (ஆக.3) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார். 

स्कूलों में Friday ऑफ पर क्यों मचा है बवाल? जानिए कब से चल रहा संडे वाला  नियम - Reason behind controversy over Bihar Jharkhand schools friday holiday  Know why Sunday is a


நீலகிரி மாவட்டத்திற்கு நாளை கன மழை எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளதை அடுத்து மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சிதலைவர் அம்ரித் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதேபோல் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு நாளை (3-8-2022) உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 27-8-2022 சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் திருமதி ஸ்ரேயா பி சிங் உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல் மழையின் காரணமாக வால்பாறை வட்டத்திற்கு மட்டும் நாளை(3-8-22) ஒருநாள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.