சட்டப்பேரவையில் இன்று காவல்துறை, தீயணைப்புத் துறை மானிய கோரிக்கை மீது விவாதம்!!

 
tn

தமிழக சட்டப்பேரவையில் இன்று காவல்துறை, தீயணைப்புத் துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெறுகிறது. 

stalin

தமிழக சட்டப்பேரவை கடந்த மாதம் 6ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.   துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் நாளான கடந்த 6ஆம் தேதி நீர்வளத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கப்பட்டது.  சட்டப்பேரவை கடந்த 13ஆம் தேதி வேளாண்மை, மீன்வளம், கால்நடை, பால்வளத்துறை ஆகிய மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.  இதையடுத்து 14ஆம் தேதி முதல் 17-ம் தேதி வரை 4 நாட்கள் சட்டசபைக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு  கடந்த 18 ஆம் தேதி மீண்டும் சட்டப்பேரவை கூடியது. அதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை இயற்கை சீற்றங்கள் குறித்து மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. தமிழக சட்டப்பேரவையில் தொழில்துறை, தமிழ் வளர்ச்சி துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் கடந்த 10 ஆம் தேதி நடை பெற்றது.  நேற்று ஆதிதிராவிட நலத்துறையின் மானிய கோரிக்கை விவாதம் நடந்தது. கடந்த 7ஆம் தேதி நிதித்துறை, சிறப்பு முயற்சிகள் துறை ,ஆளுநர், அமைச்சரவை மற்றும் பொதுத்துறை உள்ளிட்ட அரசுத் துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது.

stalin

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் இன்று காவல்துறை, தீயணைப்புத் துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெறுகிறது.  மானியக்கோரிக்கை விவாதத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார். இந்த சூழலில்  தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை, விசாரணைக் கைதிகள் மரணம் உள்ளிட்ட பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன்  தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தரை மாநில அரசே நியமிக்க வகைசெய்யும் சட்ட முன்வடிவை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்ய உள்ளார்.