இன்று சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

 
r

 மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

c

 வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியினால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது.  டெல்டா மாவட்டங்களில் அதிக கனமழை பெய்து  வருகிறது. 

 சீர்காழியில் மட்டும் வரலாறு காணாத வகையில் 122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஆறு மணி நேரத்தில் 44 சென்டிமீட்டர் மழை  கொட்டி தீர்த்தது.  இந்த அதிக கனமழையினால் சீர்காழி  பகுதி முழுவதும் வெள்ளைக்காடாக மாறி இருக்கிறது.   சீர்காழியை சுற்றி உள்ள கிராமங்கள் அனைத்தும் தனித்தீவு போல் காட்சியளிக்கின்றன.

se

 முதல்வர்  ஸ்டாலினும் மழை பாதிக்கப்பட்ட சீர்காழி , தரங்கம்பாடிபகுதியினை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் .  சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையினால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார் அம்மாவட்ட ஆட்சியர்.