#JUSTIN நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி, கோவையில் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பல்வேறு தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நேற்று நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழையும் , தேனி, திண்டுக்கல் தென்காசி மாவட்டங்களில் இன்று கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. அதன்படி நீலகிரியில் மழை வெளுத்து வாங்கியது.
இந்நிலையில் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் முழுவதும் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் தாலுக்காக்களில் நேற்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்திருந்தார். ஆனால் தொடர் கனமழையின் காரணமாக இன்று அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.