இன்றும் நாளையும் தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்

 
வ்

 தமிழ்நாடு முழுவதிலும் இன்றைய தினமும் நாளைய தினமும் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது.  69 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி தொடர்பான சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

ட்

வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் 9ஆம் தேதி தொடங்கி இருக்கிறது.  டிசம்பர் எட்டாம் தேதி வரைக்கும் பணி நடைபெறுகிறது. இக்காலகட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம் இவற்றுடன் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்புக்கான படிவங்களையும் பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் வழங்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

 வேலைக்கு செல்வோரின் வசதிக்காக தமிழகம் முழுவதும் இன்று நாளையும் 69 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி தொடர்பான சிறப்பு முகாம் நடைபெறுகிறது.  

 இந்த முகாமில் நேரடியாக படிவங்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம்.  வேலை நாட்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர் வாக்காளர் சேர்ப்புக்கான அலுவலர்களிடம் நேரடியாக இப்பணியை மேற்கொள்ளலாம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.