திருப்பத்தூர்: 8ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை
தொடர் கனமழையின் காரணமாக தமிழ்நாட்டில் எட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மூன்று மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் மட்டும் எட்டாம் வகுப்பு வரைக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் மட்டும் தொடர் மழை பெய்து வருவதால் இன்று ஒரு நாள் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டு உள்ளார் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா.
வடகிழக்கு பருவமழை கடந்த 29ஆம் தேதி தொடங்கியது. அன்று முதல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மிதமான மற்றும் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி, வந்தவாசி, செய்யார், போளூர் ஆகிய சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடியில் 16.7 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருக்கிறது மாவட்ட முழுவதிலும் பரவலாக கன மழை பெய்து வருகிறது. சென்னையில் சாலைகள் ஆறு, குளங்கள் போல் காட்சி அளிக்கின்றன. இதனால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நேற்றைக்கு இன்றைக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம் ,காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதே போல் திருவண்ணாமலை மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் திருப்பத்தூரில் மட்டும் எட்டாம் வகுப்பு வரைக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.