டிடிவி தினகரன் வழக்கில் அமலாக்கத்துறை கொடுத்த அவகாசம்

 
tt

டிடிவி தினகரனுக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் மேல்முறையீட்டு மனுவுக்கு பதில் அளிக்க அமலாக்க துறைக்கு அவகாசம் வழங்கி உத்தரவிட்டிருக்கிறது.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு எதிரான பெரா வழக்கில் அமலாக்க துறையின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, சுந்தரேஷ் அமர்வு விசாரணை நடத்தி வந்தது. 

tt

 நேற்று விசாரணையின் போது டிடிவி தினகரனின் பதில் மனுவுக்கு விளக்கமான பதில் மனு தாக்கல் செய்ய இரண்டு வாரம் அவகாசம் தேவை என்று அமலாக்கதுறை கோரிக்கை வைத்தது.  

    இந்த வழக்கில் விசாரணை அதிகாரி இந்திய தூதரகத்திற்கு அனுப்பி ஆவணங்களை வழங்க வேண்டும் என டிடிவி தினகரனின் கோரிக்கை ஏற்புடையது அல்ல என்றும் வாதிடயிடப்பட்டது.  இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் மேல்முறையீட்டு மனு தொடர்பாக விளக்க மனுவை தாக்கல் செய்ய தமிழாக்கத்துறைக்கு மூன்று  வாரம் அவகாசம் அளித்து மறு விசாரணையை ஏப்ரல் மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளது.