அடுத்த 2 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை

 
m

அடுத்த 2 மணி நேரத்தில் 4  மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

r

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் இடி , மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாக உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், தமிழ்நாட்டில் 14 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.