தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : 13 பேர் குடும்பத்திற்கு கூடுதல் நிவாரணம் - முதலமைச்சர் அறிவிப்பு..

 
stalin

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கூடுதலாக 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.   

 இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ தூத்துக்குடியில்‌ 22-8-2018 அன்று ஸ்டெர்லைட்‌ தாமிர உருக்காலையை  நிரந்தரமாக மூடக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச்‌  சூட்டல்‌ ஏற்பட்ட உமிரிழப்புகள்‌, காயங்கள்‌ குறித்தும்‌, பொது மற்றும்‌ தனியார்‌ சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள்‌ குறித்தும்‌ விசாரிப்பதற்காக மாண்பமை: சென்னை உயர்நீதிமன்ற ஒய்வுபெற்ற நீதியரசர்‌ இருமதி அருணா ஜெகதீசன்‌ அவர்களின்‌ தலைமையில்‌ விசாரணை ஆணையம்‌ அமைக்கப்பட்டது.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை- போலீசார் உட்பட 121 பேருக்கு சம்மன்

அந்த ஆணையம்‌ அரசுக்கு அளித்த அறிக்கையின்மீது தமிழ்நாடு சட்டமன்றப்‌ போவையில்‌ கடந்த 19-10-2022 இன்று நடைபெற்ற விவாதத்திற்கு முதிலளித்தும்‌ பேசிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ ஸ்டாலின்‌ அவர்கள்‌, “துப்பாக்கிச்‌ சூட்டில்‌ உயிரிழந்த 13 பேரின்‌ குடும்பத்தினருக்கு ஏற்கனவே  நிதி வழங்கப்படும்‌” என்று அறிவித்திருந்தார். மேற்படி. அறிலிப்பினைச்‌ செயல்படுத்திடும்‌ வகையில்‌, நூத்த்குடி துப்பாக்கிச்‌ சூட்டில்‌ உயிரிழந்த 13 பேரின்‌ குடும்பத்தினருக்கு கூடுதலாக தலா 5 இலட்சம்‌ ரூபாய்‌ வீதம்‌, மொத்தம்‌ 65 இலட்சம்‌ ரூபாயினை முதலமைச்சரின்‌ பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட  முதலமைச்சர்‌  இன்று (16-11-2022) உத்தாவிட்டுள்ளார்” என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.