அடுத்த 53 நாட்களுக்கு இந்த மயானபூமி இயங்காது - சென்னை மாநகராட்சி அறிவிப்பு..
Jan 7, 2023, 17:54 IST1673094272704
![சென்னை மாநகராட்சி](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/04b5c7ac9a7a37f028c8d7bfc633e940.jpg)
ஈக்காட்டுத்தாங்கல் அருளாயம்பேட்டை மயானபூமி அடுத்த 53 நாட்களுக்கு செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “ சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், வார்டு 168-க்குட்பட்ட ஈக்காட்டுத்தாங்கல் அருளாயம்பேட்டை இந்து மயானபூமியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால் இன்று (சனிக்கிழமை) முதல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 28-ந்தேதி வரை 53 நாட்கள் மேற்கண்ட மயான பூமி இயங்காது.
எனவே பராமரிப்பு பணிகள் நடைபெறும் அடுத்த மாதம் 28-ந்தேதி வரையுள்ள நாட்களில் பொதுமக்கள் உடல்களை தகனம் செய்ய அருகில் உள்ள கோடம்பாக்கம் மண்டலம், வார்டு 139-க்குட்பட்ட மேற்கு சைதாப்பேட்டை மேற்கு ஜோன்ஸ் சாலையில் உள்ள மின் மயான பூமியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.