திருவண்ணாமலை தீபம் - 2700 சிறப்பு பேருந்துகள்

 
ட்க்

திருவண்ணாமலை தீபத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் குவிந்து விடுவார்கள்.  வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள். இதனால்,  திருவண்ணாமலையில் தீபத் திருவிழாவை முன்னிட்டு 2700 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை முடிவு செய்து இருக்கிறது. 

ட்

 திருவண்ணாமலை தீபத் திருவிழா நடைபெறும் டிசம்பர் 6 மற்றும் டிசம்பர் 7 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது. பக்தர்களின் வருகையை பொறுத்து பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலை கோவில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது காண்போரை மிகவும் கவர்ந்து வருகிறது.