இந்த 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்

 
v


வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு உருவானது.   இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு இல்லை என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. அதே நேரம் இந்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழ்நாட்டில் நான்கு நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

 வடகிழக்கு பருவ மழையினால் தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது.   இதன் தொடர்ச்சியாக தற்போது வங்க கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது .  இதனால் தமிழ்நாட்டில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு பரவலாக பழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

r

 தென்மேற்கு வங்க கடல் அதனை ஒட்டி உள்ள பகுதிகளின் மேல் உருவாகி இருக்கும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை வலுவடைந்து தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும்.  12ஆம் தேதி அன்று வட மேற்கு திசையில் தமிழ்நாடு, புதுச்சேரி கரையை நோக்கி நகரக்கூடும்.   இந்த காற்றழுத்த பகுதி புயலாக மாற வாய்ப்பு இல்லை.  ஆனாலும் காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு மழை பெய்யும்.  இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்யும் .

தஞ்சாவூர், ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ,திருவாரூர், கடலூர், விழுப்புரம், சென்னை ,காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஓடி இடங்களிலும் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.