"ஆ.ராசா மீதான மதவெறி சக்திகளின் அச்சுறுத்தல்" - முத்தரசன் கடும் கண்டனம்!!

 
mutharasan

ஆ. ராசா  மீதான மதவெறி சக்திகளின் அச்சுறுத்தலை முத்தரசன் வன்மையாக கண்டித்துள்ளார்.

இதுகுறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தி.மு.கழக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான திரு.ஆ.ராசா அவர்களின் சமீபத்திய உரையை முன்வைத்து, பாரதீய ஜனதா கட்சியும், மதவெறி அமைப்புகளும் தமிழ்நாட்டில் வன்முறையை தூண்ட முயற்சிக்கின்றன.

a raja

மனுஸ்மிருதியில், சாதிய முறையை நியாயப்படுத்தியும், இந்தியாவின் பெரும்பகுதி மக்களை இழிவுபடுத்தியும் உள்ள வாசகங்களை எடுத்துக் கூறியும், இவை இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் நோக்கங்களுக்கும், விதிகளுக்கும் எதிராக உள்ளதையும் திரு.ஆ.ராசா தன் உரையில் குறிப்பிட்டுள்ளார்.

mutharasan
ஆனால் பாரதீய ஜனதா கட்சியும், மதவெறி அமைப்புகளும் திரு.ஆ.ராசா அவர்கள் இந்து மதத்திற்கு எதிராக பேசியதாக திரித்துக் கூறி தமிழ்நாட்டில் கலவரத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர். இவர்களுக்கு கருத்துச் சுதந்திரத்தின் மீது எப்பொழுதுமே நம்பிக்கை இருந்ததில்லை. கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாமல் வன்முறையை நாடுகின்றார்கள். இவர்களின் இத்தகைய நடவடிக்கைகளை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கின்றது. மேலும் திரு.ஆ.ராசா அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழ்நாடு அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.